செய்திகள்
கமாண்டோ சலிந்த அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Feb 27, 2026 - 04:09 PM -

0

கமாண்டோ சலிந்த அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த, பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளர் எனக் கூறப்படும் 'கமாண்டோ சலிந்த' என்பவரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கமாண்டோ சலிந்த என்பவரை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,. கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமவின் உத்தியோகபூர்வ அறைக்குள் இன்று (27) ஆஜர்ப்படுத்தினர். 

இதன்போது, விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தனர். 

அதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05