Feb 27, 2026 - 06:30 PM -
0
இந்தியா - சிம்பாப்வே இடையிலான ஆட்டம் நேற்று (26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இந்தியா 256 ஓட்டங்களை குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார். பந்து வீச்சில 3 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
டி20 உலகக் கிண்ண இது அவரின் 3 ஆவது ஆட்ட நாயகன் விருது ஆகும். அதன்மூலம் ரோகித் சர்மா, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
விராட் கோலி 8 முறை ஆட்ட நாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்று 2 ஆவது இடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர்.

