Mar 1, 2026 - 08:06 AM -
0
கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயாயவத்தை மயானத்திற்கு அருகில் உள்ள உட்பாதை ஒன்றில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் 4 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
ஏதேனும் குற்றச் செயலைச் செய்வதற்கு இந்த ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து கட்டானை பொலிஸாரும் நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

