Mar 1, 2026 - 10:00 AM -
0
ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 133 ஈரானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் வொஷிங்டனை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைக் குழுவான மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்கள் ஓர் ஆரம்பகட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாகும் என குறிப்பிடப்படுகின்றது.
18 மாகாணங்களில் சுமார் 58 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்றும், இதில் தலைநகர் தெஹ்ரானிலேயே அதிகளவிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இராணுவ உயிரிழப்புகள், உட்கட்டமைப்பு மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் கடுமையான இணையத் துண்டிப்புகள் குறித்தும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

