சினிமா
நூலிழையில் தப்பிய சந்தோஷ் நாராயணன்!

Mar 2, 2026 - 10:53 AM -

0

நூலிழையில் தப்பிய சந்தோஷ் நாராயணன்!

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் -அமெரிக்கா கடந்த 28 ஆம் திகதி காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. 

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஈரான் தாக்குதல் காரணமாக துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. துபாயின் அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர் 

வளைகுடா நாடுகளில் ஒன்றான கட்டாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளது. அந்நாட்டில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை முழுமையாக அழித்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், கட்டாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் X தளப் பதிவில், 'விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்கு முன்பு மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்ட கடைசி விமானம் எனது கட்டார் விமானமாக இருக்கலாம். நான் அமெரிக்காவிற்கு பறக்கும்போது ஸ்டார்லிங்க் வழியாக இணைக்கப்பட்டேன். பிராந்தியத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், கட்டாரில் இருந்து புறப்பட்ட சந்தோஷ் நாராயணன் பத்திரமாக அமெரிக்கா சென்றடைந்ததாக மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05