Header Logo

செய்திகள்
போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சீனா எச்சரிக்கை

Mar 4, 2026 - 02:45 PM -

0

போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சீனா எச்சரிக்கை

பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது. 

 

எனவே, மோதல்கள் மேலும் தீவிரமடைவதையும் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதையும் தடுப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சீனா கோரியுள்ளது.

 

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச உறவுகளில் உலக நாடுகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கக்கூடாது என சீன வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார். 

 

இஸ்ரேல் உட்பட அனைத்துத் தரப்பினரின் அடிப்படைத் தேவைகளுக்கும் இது பொருந்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 

சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியான சிக்கலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்ப்பதற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், அனைத்துத் தரப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அண்மைய பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ள போதிலும், துரதிர்ஷ்டவசமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஆயுத மோதல்களால் அந்த முயற்சிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சர் கவலை தெரிவித்தார்.

 

மத்திய கிழக்கு பிரச்சினை தொடர்பில் எப்போதும் நடுநிலையான மற்றும் நியாயமான நிலையில் இருக்கும் சீனா, மோதல்களைக் குறைப்பதில் தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title