Mar 7, 2026 - 11:33 PM -
0
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் கலந்துகொண்டுள்ள பலர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தப் போராட்டமானது ஈரானிய ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடத்தப்படும் ஒன்றல்ல என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.