Header Logo

விளையாட்டு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பின்னடைவு!

Mar 13, 2026 - 12:05 PM -

0

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பின்னடைவு!

ஐபிஎல் தொடரின் 19 ஆவது சீசன் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளது. 

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. 

காயம் காரணமாக அவர் சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடர் மற்றும் டி20 உலகக் கிண்ண தொடரிலும் பங்கேற்கவில்லை. அவர் தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வைத்தியக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். வைத்தியக் குழுவிடமிருந்து 'பிட்னஸ் சான்றிதழ்' கிடைத்தால் மட்டுமே அவர் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியும். 

கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கிண்ணத்தை வெல்ல ஹேசில்வுட் மிக முக்கியக் காரணமாக இருந்தார். அந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் இல்லாத பட்சத்தில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சுத் துறை பலவீனமடைய வாய்ப்புள்ளது. 

இதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அவரும் வைத்திய அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title