Mar 14, 2026 - 04:48 PM -
0
ஐபிஎல் 2026 சீசன் வருகிற மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது ரசிகர்களுக்காக 'Roar at Chepauk' என்ற பிரம்மாண்ட கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியை மார்ச் 22 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய் மற்றும் எஸ். பத்ரிநாத் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இந்த விழாவில் ஒரு சிறப்பு நேரடி இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளார்.
மேலும் தற்போதைய சிஎஸ்கே வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் இடையே சில சுவாரஸ்யமான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சவால்கள் இந்த விழாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
