Mar 14, 2026 - 08:46 PM -
0
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
பல நாடுகள் தமது வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காகப் போர்க்கப்பல்களை அனுப்பும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் இராணுவ பலத்தை அமெரிக்கா 100 சதவீதம் அழித்துள்ள போதிலும், அவர்கள் இன்னும் ட்ரோன்கள், கண்ணிவெடிகள் மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
