Mar 15, 2026 - 08:52 AM -
0
அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டின் நடுநிலைமை தொடர்பான சட்டங்களை மேற்கோள் காட்டி இந்த அனுமதி மறுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து தனது வான்பரப்பைத் திறக்காத அதேவேளை, மேலும் மூன்று விமானங்களுக்கு வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
இது குறித்து சுவிட்சர்லாந்து அரசு விடுத்துள்ள அறிக்கையில், பராமரிப்பு விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களுக்கு மாத்திரம் தமது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
