Mar 15, 2026 - 11:45 AM -
0
உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக, ஈராக் கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப் பயணிக்கத் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்தப் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஈராக் அணி மார்ச் 31 ஆம் திகதி மொன்டேரேயில் பொலிவியா அல்லது சூரினாம் ஆகிய அணிகளில் ஒன்றுடன் போட்டியிடவுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி 2026 கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெறும் என அந்தச் செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
