Header Logo

விளையாட்டு
பும்ராவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் நிலை என்ன?

Mar 20, 2026 - 02:08 PM -

0

பும்ராவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் நிலை என்ன?

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பற்றிய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. முக்கிய போட்டிகளில் அசத்தும் பும்ராவை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், அவருக்கு பிறகு இந்திய அணியின் நிலை என்ன என்பதே கேள்வியாக உள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். 

இந்திய அணியின் வெற்றிகளில் பும்ராவின் பங்கு மிக முக்கியமானது என அஸ்வின் கூறினார். அவரது தரத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை உருவாக்குவது எளிதல்ல என்றும், அவர் ஓய்வு பெற்ற பின் அணிக்கு சவால்கள் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், தற்போதைய கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ரசிகர்கள் சிக்ஸர்கள், அதிரடி ஆட்டங்களை அதிகம் விரும்புவதால், இளம் தலைமுறை வீரர்கள் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார். 

இதன் காரணமாக எதிர்காலத்தில் தரமான பந்துவீச்சாளர்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கலாம் என அஸ்வின் எச்சரித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title