Mar 25, 2026 - 08:14 PM -
0
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த நிபந்தனைகளை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரானின் சிரேஷ்ட அரசியல்-பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று (25) அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ஈரானின் சொந்த நிபந்தனைகள் மற்றும் கால அட்டவணையின்படியே போர் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வரும் நேரத்தைத் தீர்மானிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரான் இடமளிக்காது என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் 5 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது:
எதிரியின் 'ஆக்கிரமிப்புகள் மற்றும் கொலைகளை' முற்றாக நிறுத்துதல்.
ஈரானுக்கு எதிராக மீண்டும் போருக்கு வரமாட்டோம் என்பதற்கான உறுதிமொழி.
போர்ச் சேதங்கள் மற்றும் இழப்பீடுகள் தொடர்பாகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட உத்தரவாதம்.
பிராந்தியம் முழுவதும் போரில் ஈடுபட்டுள்ள அனைத்துப் எதிர்த்தரப்புக் குழுக்களும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் போரை நிறுத்துதல்.
ஈரானின் இயற்கையான மற்றும் சட்டபூர்வமான உரிமையான ஹோர்முஸ் நீரிணையை, தொடர்ந்தும் ஈரானின் இறையாண்மையின் கீழேயே இயங்கச் செய்தல்.
