Header Logo

வடக்கு
வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Mar 26, 2026 - 12:04 PM -

0

வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மாகாண கல்வித் திணைக்களம் தமது இடமாற்றக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யாது, மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்து வட மாகாண ஆசிரியர்கள் இன்றையதினம் (26) போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 

வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஒன்றுகூடிய ஆசிரியர்கள், பல்வேறு பதாதைகளைத் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். 

ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்தோர், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குடும்பச் சூழல் காரணமாகத் தூர இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் எனப் பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

தமது இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாகாண கல்வித் திணைக்களத்திற்கு மேன்முறையீடு செய்தும், அந்த விண்ணப்பங்களை மாகாண கல்வித் திணைக்களம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவில்லை என ஆசிரியர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர். 

இதனைத் தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் உள்ளிட்ட பிரதிநிதிகள், வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீ என்பவரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். 

இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தீபன் திலீசன், "மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக எந்தவொரு மேன்முறையீடும் தமக்கு அனுப்பப்படவில்லை என்றும், அவ்வாறு அனுப்பப்பட்டால் மட்டுமே தம்மால் அவற்றைப்பரிசீலிக்க முடியும் என்றும் செயலாளர் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டார். 

பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதிலைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தமது போராட்டத்தை வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகத் தொடர்ந்தனர். 

தமது மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு வழங்கப்படும் வரை, தற்போது பணியாற்றும் பாடசாலைகளிலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

--

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title