Header Logo

செய்திகள்
அரிசி இறக்குமதிக்கு தயாராகும் அரசாங்கம்!

Mar 26, 2026 - 09:21 PM -

0

அரிசி இறக்குமதிக்கு தயாராகும் அரசாங்கம்!

கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகளை கறுப்புச் சந்தை விலையில் கூட வாங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

சம்பா, கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசி வகைகள் கட்டுப்பாட்டு விலையையும் தாண்டி விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, 

இது நாம் பாரதூரமாக எதிர்கொள்ள வேண்டிய ஒரு பிரச்சினையாகும். சில இடங்களில் கறுப்புச் சந்தை விலையில் கூட கீரி சம்பா மற்றும் சில அரிசி வகைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது அறுவடைக்காலம் ஆகும். இது குறித்து உணவுப் பாதுகாப்பு குழுவும் கலந்துரையாடியுள்ளது. 

நிலைமை இப்படியே தொடர்ந்தால், கறுப்புச் சந்தை விலையைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

 

 

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title