Mar 27, 2026 - 02:14 PM -
0
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
தொடக்க போட்டிக்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் 2026-ன் பிரம்மாண்ட தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஆர்பிசி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு தொடக்க விழாவை நடத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
