Mar 27, 2026 - 06:03 PM -
0
எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் நாளை (28) முதல் வழமை போல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நகரங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
