Apr 4, 2026 - 07:06 AM -
0
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
இதன் மூலம் சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், பஞ்சாப்பிற்கு எதிரான தோல்வியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 6வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த 6 ஆட்டங்களில் கடைசி 5 ஆட்டங்களில் சென்னை தோல்வியடைந்தது. தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் சென்னை தோல்வியடைந்துள்ளது.
இதன் மூலம் சேப்பாக்கத்தில் தொடர்ந்து 6வது முறையாக சென்னை தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
