Apr 4, 2026 - 06:53 PM -
0
வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, விற்பனைக்காக 1 கிலோ 970 கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற வேளையிலேயே இவ்விரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த கஞ்சாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
--
