Header Logo

விளையாட்டு
IPL இல் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்!

Apr 6, 2026 - 07:07 PM -

0

IPL இல் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (06) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடி ஆர்சிபி 250 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 251 ஓட்டங்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே 207 ஓட்டங்களில் சுருண்டு 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியில் ஆர்.சி.பி. வீரர் புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

முதல் விக்கெட்டாக ஆயுஷ் மாத்ரேவை 1 ஓட்டங்களில் வீழ்த்தினார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் புவனேஷ்வர் குமாரின் 200 ஆவது விக்கெட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார். 

இதற்கு முன்னதாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது அவர் 224 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

இவர்கள் இருவரையும் தவிர்த்தி டி20 பிளாஸ்ட் தொடரில் பிரிக்ஸ் (268), சமித் பட்டேல் (230), கிறிஸ் வுட் (210), டேவிட் பெய்ன் (210) 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். 

பவர்பிளேயில் மட்டும் 81 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் முதல் ஓவரில் 27 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். டிரென்ட் போல்ட் முதல் ஓவரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

2016 மற்றும 2017 சீசன்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title