Apr 8, 2026 - 06:17 AM -
0
ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்வழிப் போக்குவரத்திற்கு இரண்டு வார காலத்திற்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாக ஈரான் தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த இடைநிறுத்தம் பயன்படுத்தப்படும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்தப் போர்நிறுத்தம் லெபனான் உட்பட 'அனைத்து இடங்களுக்கும்' பொருந்தும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
