Header Logo

வடக்கு
ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

Apr 8, 2026 - 09:27 AM -

0

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

யாழ். சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 30 ஆம் திகதி வழிபாட்டில் ஈடுபட்ட பெண்ணின் தாலிக்கொடி இறுக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதற்கமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ம.கோணேஸ்வரனின் வழிகாட்டலில், பெருங்குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி க. ஜெயரூபன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதன்போது சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாணையில் இனங் காணப்பட்ட சந்தேக நபரான பெண் கடந்த 06 ஆம் திகதி மட்டுவில் பன்றித்தலைச்சி ஆலயத்தில் இடம்பெற்ற நான்காவது பங்குனி திங்கள் உற்சவத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் பிற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி மீட்கப்பட்டதோடு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பிரதான சந்தேக நபரான 58 வயதான பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் நேற்று (07) சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

பார்வை ஒரு தடையல்ல!

பார்வை ஒரு தடையல்ல!

title