Header Logo

இந்தியா
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு

Apr 9, 2026 - 10:26 AM -

0

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு

இந்தியாவின் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09) காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. 

ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட லோக்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

 

அவர் தனது வாக்கை புதுச்சேரி மாநிலத்துக்கு மாற்றியுள்ளார். புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவையொட்டி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

கவர்னர் தனது தாயார் லீனா, மனைவி பீனா ஆகியோருடன் வந்து வாக்களித்தார். கவர்னரின் தாயார் லீனா சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். வாக்களித்த பின் கவர்னர் கைலாஷ்நாதன் கூறும்போது, ஜனநாயகத்தை காக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நம் அனைவரின் கடமை என கூறினார். 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இந்திராநகர் தொகுதிக்கு உட்பட்ட திலாசுப்பேட்டை பிள்ளையார்கோவில் வீதியில் வசித்து வருகிறார். அவர் திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக அவர் தனது வீட்டிலிருந்து மோட்டர் சைக்கிளில் வந்தார். 

அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவியுடன் சென்று, திருக்கனுார் அரசு பாடசாலையிலும், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் நெட்டப்பாக்கம் மடுகரை அரசு நடுநிலைப் பாடசாலையிலும், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் ரயில்நிலையம் எதிரே உள்ள குபேர் திருமண மண்டபத்திலும், லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ரெட்டியார்பாளையம் இமாகுலேட் பாடசாலையிலும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

Comments
0

MOST READ

காணொளி
அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

title