Header Logo

வடக்கு
சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்!

Apr 9, 2026 - 01:13 PM -

0

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்!

வவுனியா, செக்கடிப்புலவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் ஒருவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

நேற்று (08) இரவு செக்கடிப்புலவு பகுதியில் வசித்துவந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்பவருக்கும், அவரது சகோதர முறையான ஒருவருக்கும் இடையில் திடீர் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது மதுபோதையில் இருந்த சகோதரர், அப்பெண்ணைக் கத்தியால் குத்தியுள்ளார். 

கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த பெண், அங்கிருந்தவர்களின் உதவியுடன் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்துள்ளார். 

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான சகோதரரைப் பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

title