Header Logo

செய்திகள்
குஷ் போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகரின் தாய் கைது

Apr 9, 2026 - 06:15 PM -

0

 குஷ் போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகரின் தாய் கைது

மொரகஹஹேன, கும்புக பகுதியில் 15 கிராம் 'குஷ்' போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வீடொன்று போதைப்பொருள் விநியோக மையமாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (9) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் உத்தியோகத்தர் இந்திக வீரசிங்கவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் பரிசோதகர் விமல் தலைமையிலான குழுவினர் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர். 

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 15 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

சோதனையின் போது, சந்தேகநபரான பெண் தனது மகன் ஒரு பொலிஸ் பரிசோதகர் எனக் கூறி சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

எனினும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரிடம் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. 

பொலிஸ் விசாரணைகளின்படி, இந்தப் பகுதி முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்வதற்கான பாதுகாப்பான இடமாக இந்த வீடு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அத்துடன், சந்தேகநபரின் மகன் கொழும்பு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் உத்தரவின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்கவின் வழிகாட்டலில், பொலிஸ் பரிசோதகர் விமல் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

title