Header Logo

செய்திகள்
புத்தாண்டுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான அறிவித்தல்

Apr 9, 2026 - 07:57 PM -

0

புத்தாண்டுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான அறிவித்தல்

எதிர்வரும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக மாகும்பூர பல் போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து தற்போது மேலதிக பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, நேற்று (08) முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை (இறுதிப் பயணி இருக்கும் வரை) போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயணிகள் மாகும்பூர நிலையத்திற்கு வருவதற்கு முன்னதாக '0112-034474' என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பஸ் நேர அட்டவணையை அறிந்துகொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

எனினும், பயணிகளின் வசதி கருதி முடிந்தவரை முன்கூட்டியே நிலையத்திற்கு வந்து சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மாகும்பூர பஸ் நிலைய உதவி முகாமையாளர் டி.எம். வெத்தசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். 

கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற பஸ்கள் மீண்டும் திரும்பிய பின்னரே இரவு நேர சேவைகள் முன்னெடுக்கப்படும் என்பதால், இடையில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும். 

எனவே, அசௌகரியங்களைத் தவிர்க்க முன்கூட்டியே வருமாறு அவர் பயணிகளை வலியுறுத்தியுள்ளார். 

இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து இந்த விசேட போக்குவரத்து சேவையை முன்னெடுத்துள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

title