Apr 10, 2026 - 01:56 PM -
0
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 28,837 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சோதனைகளின் போது சந்தேகத்தின் பேரில் 763 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 27 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 240 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 165 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 132 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 78 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,579 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
