Header Logo

செய்திகள்
புதுவருட காலப்பகுதிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Apr 10, 2026 - 11:56 PM -

0

புதுவருட காலப்பகுதிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

புதுவருட காலப்பகுதியினுள் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முப்படையினர், இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் முன்னெடுப்பில் இந்த விசேட பாதுகாப்பு பொறிமுறை செயற்படுத்தப்படுகிறது. 

இந்த கூட்டு வேலைத்திட்டத்தின் மூலம், புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் நடைபெறவுள்ள பல்வேறு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகளின் போது பாதுகாப்பு விவகாரங்கள் கண்காணிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இதற்காக, கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன், இது முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஒருங்கிணைப்புடன் கூட்டுச் செயற்பாட்டு மையமாக இயங்கும். 

இந்த விசேட செயற்பாட்டு மையத்தை பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்: 

தொலைபேசி எண்கள்: 

011-2013051 / 011-2027148 

011-2027149 / 011-2430912 

மின்னஞ்சல் முகவரி: 

igp.opsroom@police.gov.lk 

அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பது, தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துவது மற்றும் ஏதேனும் அவசர அல்லது பாதுகாப்பு நிலமைகளின் போது விரைவாக செயற்படுவதற்கான வசதிகள் இந்த மையத்தின் ஊடாக வழங்கப்படுகின்றன. 

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களுக்கும் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக, பாதுகாப்புப் படையினருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title