Apr 12, 2026 - 08:25 AM -
0
கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்துகளில் பெரும்பாலானவை போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தியமையாலேயே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
