Apr 12, 2026 - 05:41 PM -
0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கன்னியாகுமரியில் இன்று பேரணி செல்ல அனுமதி தவெக தரப்பில் கோரப்பட்டது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். மகாதானாபுரம் ரவுண்டானாவில் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது சில வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு,
ஆவணங்களின் பெயரால் இலஞ்சம் வாங்குவது, அலைக்கழிப்பதை அனுமதிக்க மாட்டோம்.
நலத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டாம் வீடு தேடி அரசு திட்டம் வரும். நமது அரசு அமைந்த ஆறு மாதங்களுக்குள் வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும். பல சேவைகள் அந்த செயலியில் இருக்கும்.
இலஞ்சம் இல்லாமல் அரசின் நலத்திட்டம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் கட்டாயம் பதில் அளிக்கப்படும்.
பத்து லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும். புதிய இணையதளத்தை உருவாக்கி அரசுக்கு முன்வைக்க உள்ள ஆலோசனைகளை வழங்கலாம்.
தமிழக அரசின் சேவைகள் தாமதமானால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும்.
