Header Logo

செய்திகள்
பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் - சஜித்

Apr 12, 2026 - 06:01 PM -

0

பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் - சஜித்

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஹம்பாந்தோட்டைப் பகுதியில் உள்ள யோதகண்டிய போதி மஹா விகாரை, நாக மஹா விகாரை மற்றும் சித்தல்பவ்வ மகுல் மஹா விகாரை ஆகிய இடங்களுக்கு இன்று (12) விஜயம் செய்த அவர், அங்குள்ள தேரர்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டின் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் என மக்கள் எதிர்பார்த்த போதிலும், மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவில் அதிகரித்துள்ளன. 

உரம் தட்டுப்பாடு போன்ற நிலைமைகளால் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். 

பொருட்களின் விலை அதிகரிப்புக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேள்வி எழுப்புவதாகவும், இந்தத் தருணத்தில் எரிபொருள், எரிவாயு விலைகள் மட்டுமன்றி மின்சாரக் கட்டணம், உணவு, உரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகளுக்கு இன்னும் தீர்வை வழங்க முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title