Apr 12, 2026 - 08:11 PM -
0
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய (12) 19வது லீக் போட்டியில் குஜராத் டைட்ன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் எய்டன் மர்க்றம் அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
குஜராத் சார்பில் பந்துவீச்சில் பிரதிஸ் கிரிஷ்னா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 165 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய குஜராத் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
குஜராத் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜோஸ் பட்லர் 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
