Header Logo

செய்திகள்
நாளையும் மாகும்பரவில் பஸ் சேவை இடம்பெறும்

Apr 13, 2026 - 11:10 AM -

0

நாளையும் மாகும்பரவில் பஸ் சேவை இடம்பெறும்

புத்தாண்டை முன்னிட்டுத் தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றைய தினமும் (13) பயணிகள் வரும் வரை போக்குவரத்து வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாக மாக்கும்பர பல்நிலை போக்குவரத்து மத்திய நிலையத்தின் முகாமைத்துவ உதவியாளர் டி.என். வெத்தசிங்க தெரிவித்துள்ளார். 

அத்துடன், நாளை (14) புத்தாண்டு தினத்தில் வெற்றிலை கொடுத்து உறவினர்களைச் சந்திக்கத் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாகச் செல்லும் மக்களுக்காகப் போதுமான அளவு பஸ்களைத் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த சில நாட்களை விட இன்று பயணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சியைக் காண்கிறோம். பயணிகள் வருவார்களாயின், எந்தத் திசைக்கும் பஸ்களை அனுப்ப மாக்கும்பர போக்குவரத்து நிலைய ஊழியர்கள் தயாராக உள்ளனர். 

பயணிகள் இருக்கும் வரை பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கிறோம். 

எனினும், ஒரு பஸ்ஸில் இரண்டு அல்லது மூன்று பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு பயணிக்க முடியாது. 

போதிய அளவு பயணிகள் இருந்தால் மட்டுமே எங்களால் பஸ்களை அனுப்ப முடியும். ஏனெனில், நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பயணிகளே இல்லாமல் பஸ்களை இயக்குவது ஒரு தேசியக் குற்றமாகும். 

எனவே, ஒரு பஸ்ஸில் அரைவாசிப் பயணிகளாவது இருந்தால் எங்களால் சேவையை வழங்க முடியும். 

நாளை காலை வேளையில் புத்தாண்டுச் சடங்குகளுக்காகத் தமது ஊர்களுக்குச் செல்லும் மக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளைத் தடையின்றி வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title