Apr 13, 2026 - 02:17 PM -
0
பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த உடுகம்பொல அலயா என அழைக்கப்படும் நபரே இவ்வாறு இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரும் ஆவார்.
இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையைத் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பான விபரங்களை எதிர்வரும் நாட்களில் இலங்கை பொலிஸாருக்கு அறிவித்து, அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
