Header Logo

விளையாட்டு
ரகானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம்!

Apr 15, 2026 - 09:54 AM -

0

ரகானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம்!

19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று (14) இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 22 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களை குவித்தது. 

193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 160 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் தற்போது 8 ஆவது இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெதுவாக ஓவர் வீசியதற்காக கொல்கத்தா அணி தலைவர் ரகானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல். நடத்தை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட இந்த அபராதமானது, இந்த சீசனில் கொல்கத்தா அணியின் முதல் விதிமீறலாக அமைந்ததால், இந்த அபராதமானது அணி தலைவருக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத கொல்கத்தா அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறுவதால் ரகானே மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title