Apr 16, 2026 - 09:24 AM -
0
ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நேற்று (15) அணிகள் மோதின.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆர்.சி.பி. அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 40 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக ரசிக் சலாம் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், க்ரூனால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 49 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பில் ப்ரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
