Apr 16, 2026 - 11:41 AM -
0
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரூபல் ஹொசைன் தனது 36 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நீண்ட காலமாக பங்களாதேஷ் அணிக்காக ஆடிய ரூபல் ஹொசைன், தனது வேகப்பந்து வீச்சு திறன் மூலம் பல முக்கிய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
இருப்பினும், அவர் முழுமையாக கிரிக்கெட்டிலிருந்து விலகவில்லை. உள்ளூர் மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
