Header Logo

விளையாட்டு
பிரபல சிஎஸ்கே வீரர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!

Apr 16, 2026 - 12:11 PM -

0

பிரபல சிஎஸ்கே வீரர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, ஐபிஎல் 2026 தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். 

இந்த சீசனில் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு வலுசேர்த்த கலீலின் இந்த விலகல், அந்த அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

அவரது காயம் தொடர்பில் வெளியாகியுள்ள வைத்திய தகவல்களின்படி, 

கலீல் அகமதுவுக்கு வலது தொடையில் 'கிரேடு 2' (Grade 2) அளவிலான தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. அவரது வலது 'ரெக்டஸ் ஃபெமோரிஸ்' தசைநாரில் பகுதி அளவிலான கிழிவும், தசையில் முழுமையான கிழிவும் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த காயத்தின் தீவிரம் காரணமாக, அவர் 10 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட முடியாது. 

கலீல் அகமதுவின் விலகல் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பிரிவில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மாற்றாக யாரை களம் இறக்குவது என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title