Header Logo

விளையாட்டு
அசத்தல் சாதனை படைத்த சஞ்சு சாமசன்!

Apr 24, 2026 - 12:48 PM -

0

அசத்தல் சாதனை படைத்த சஞ்சு சாமசன்!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று (23) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

சென்னை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 101 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார். 

இதன் மூலம் அவர் இதுவரை எந்த சி.எஸ்.கே வீரரும் படைக்காத சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். 

இந்த சதம் மூலம், ஐ.பி.எல். வரலாற்றிலேயே முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார். 

நடப்பு ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் விளாசிய இரண்டாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 208 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது. 

மும்பை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் திலக் வர்மா அதிகபட்சமாக 37 ஓட்டங்களை பெற்றார். 

இந்த வெற்றியுடன் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

title