Apr 25, 2026 - 07:05 PM -
0
ஐ.பி.எல்.தொடரின் 35 ஆவது லீக் போட்டி டெல்லியில் இன்று (25) நடைபெறுகிது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 264 ஓட்டங்களை குவித்தது. கே.எல்.ராகுல் 152 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து, 265 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி துடுபெடுத்தாடி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் அணி ஐ.பி.எல் வரலாற்றில் பவர் ப்ளேயில் அதிக ஓட்டங்களை பெற்ற 2 ஆவது அணியாக சாதனை படைத்தது.
2024 இல் டெல்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பவர் ப்ளேயில் 125 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
