Header Logo

விளையாட்டு
சாதனை படைத்த சுனில் நரைன்!

May 4, 2026 - 12:20 PM -

0

சாதனை படைத்த சுனில் நரைன்!

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சுனில் நரைன். மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான இவர் ஐ.பி.எல். தொடரில் இதுவரை எந்த சர்வதேச வீரரும் எட்டாத சாதனையை படைத்து அசத்தியுள்ளார். 

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று (03) மதியம் நடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது சுனில் நரைன் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதன்படி ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார். 

இதுவரை இல்லாத அளவுக்கு முதல் சர்வதேச வீரராக சாதனை படைத்த சுனில் நரைனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான ஷாருக் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், "சுனில், என் நண்பா... 15 சீசன்கள்... 200 இற்க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள்... 3 கிண்ணங்கள்.. மற்றும் உலகம் முழுவதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்னும் பல சாதனைகள் படைத்த உனக்கு என் வாழ்த்துகள்!!! 

நீ ஒரு மந்திரவாதி, எங்கள் சொந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரை போலவே நாங்கள் உன்னை நேசிக்கிறோம். இன்றும், என்றும் உனக்கு என் அன்பு... ஆரோக்கியத்துடன் இரு; எப்போதும் புன்னகை செய்!," என குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title