Header Logo

விளையாட்டு
இந்திய அணியின் முன்னாள் வீரர் திடீர் மரணம்!

May 7, 2026 - 03:24 PM -

0

இந்திய அணியின் முன்னாள் வீரர் திடீர் மரணம்!

ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியவரும், விராட் கோலியின் சக வீரருமான அமன்பிரீத் சிங் கில் காலமானார். 36 வயதே ஆன அவரது மறைவு கிரிக்கெட் உலகை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்திய U19 அணியில் இடம்பெற்றிருந்தவர் அமன்பிரீத் சிங் கில். கடந்த 2006 முதல் 2008 வரை 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் விராட் கோலியின் சக வீரராக இருந்த கில், பஞ்சாப் அணிக்காக ஆறு முதல் தரப் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஐபிஎல்லிலும் பங்கேற்று விளையாடியிருக்கிறார் அமன்பிரீத் சிங். 

முதல் ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் அங்கம் வகித்தார். பின்னர் பஞ்சாபின் மூத்த தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் அவர் திடீரென மரணமடைந்திருக்கிறார் என்கிற செய்தி கிரிக்கெட் உலகை துயரில் ஆழ்த்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 

இந்தச் செய்தியைக் கேட்டு "அதிர்ச்சியும் வருத்தமும்" அடைந்ததாக கோலி ட்வீட் செய்திருந்த நிலையில், யுவராஜ் சிங்கும் கில்லுக்கு அஞ்சலி செலுத்தி, "அமன்பிரீத் சிங் கில்லின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் விளையாட்டை நேசித்த, அமைதியான, கடின உழைப்பாளி வீரர்" என்று கூறினார். 

பஞ்சாப் கிரிக்கெட் சங்கமும் தனது இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், "பஞ்சாப் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மூத்த தேர்வுக் குழுவின் உறுப்பினருமான அமன்பிரீத் சிங் கில் மறைவுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது மனமார்ந்த இரங்கல்கள்." என்று கூறப்பட்டுள்ளது. 

அமன்பிரீத் சிங் கில் 2007 இல் இந்தியாவுக்காக ஐந்து இளைஞர் ஒருநாள் போட்டிகளிலும் ஒரு இளைஞர் டெஸ்ட் போட்டியிலும் விளையாடினார். இருப்பினும், 2008 உலகக் கிண்ணத்தை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய U-19 அணியில் அவர் இடம்பெறவில்லை.


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title