Header Logo

செய்திகள்
போலி டொலருடன் இரு வௌிநாட்டவர்கள் கைது

May 8, 2026 - 10:31 AM -

0

போலி டொலருடன் இரு வௌிநாட்டவர்கள் கைது

போலி அமெரிக்க டொலர்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு வெளிநாட்டவர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நேற்று (07) ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலல்ல பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்த இந்த இரண்டு வெளிநாட்டவர்களும், வணிக நிறுவனம் ஒன்றில் கொடுக்கல் வாங்கலுக்காக 400 போலி அமெரிக்க டொலரை வழங்கியதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுற்றுலா விசா மூலம் இலங்கையில் தங்கியிருந்த சந்தேக நபர்களிடமிருந்து மேலும் 5,200 போலி அமெரிக்க டொலர் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இந்தச் சம்பவம் தொடர்பாக 26 மற்றும் 27 வயதுடைய தஜிகிஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title