Header Logo

செய்திகள்
இலஞ்ச குற்றச்சாட்டில் கைதான குருணாகல் பிரதி மேயரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

May 9, 2026 - 09:36 AM -

0

இலஞ்ச குற்றச்சாட்டில் கைதான குருணாகல் பிரதி மேயரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீனின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்த அந்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் (ACMC) பிரதிநிதித்துவப்படுத்தி குருணாகல் மாநகர சபைக்குத் தெரிவான அவர், மாநகர சபையில் ஆட்சியமைக்கும் போது தனது ஆதரவைத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வழங்கியிருந்தார். அதன் பின்னர் அவர் பிரதி மேயராகப் பதவியேற்றார். 

குருணாகல் பேருந்து நிலையத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் பொது மலசலக்கூடத்தைச் சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தை (Tender) வழங்குவதற்காகவே அவர் குறித்த இலஞ்சப் பணத்தைக் கோரியதாகக் கூறப்படுகிறது. 

இதன்படி, 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற போது, பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று (08) பிரதி மேயர் கைது செய்யப்பட்டார்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title