May 9, 2026 - 11:22 AM -
0
திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில இன்று (09) காலை குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், குறித்த மரணம் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதய கம்மன்பிலவின் அந்தப் அறிக்கை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
