May 9, 2026 - 07:02 PM -
0
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா நான்கு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வினாடிக்கு 11,100 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று (01) பிற்பகல் 01.15 மணியளவில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடி வீதமும், நான்கு வான் கதவுகள் தலா மூன்று அடி வீதமும், இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதமும் திறந்துவிடப்பட்டுள்ளன.
இதன் ஊடாக வினாடிக்கு 8,113 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
