May 12, 2026 - 02:48 PM -
0
காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை வர்த்தக நாமமாகவும் திகழும் ஜனசக்தி லைஃப், கல்வியாளர் பாரத லங்காகே உடன் இணைந்து, 5,000 இற்கும் மேற்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் வழங்கும் ஷில்பசக்தி என்ற கல்வி நிகழ்ச்சித் திட்டத்தை நடத்தியது. மேலும், இந் நிகழ்ச்சியின் ஊடாக குலுக்கல் முறை மூலம் ஐந்து மாணவர்களை தெரிவு செய்து, அவர்களுக்கு tablets மற்றும் இரு தளப் பேரூந்தில் கொழும்பு நகரச் சுற்றுப்பயணத்தையும் வழங்கியது.
இது கல்வி ஊடாக இளம் மாணவர்களை ஊக்கமளிக்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. சிறந்த வெற்றியாளர்களாக L. தரிந்து தனுஷ்க, A.G. ஹசந்தி சஞ்சலிகா சத்சரணி, K.M. நேஹா டெவ்லிந்தி குணதிலக்க, W. தினக்ஷா சஸ்விந்து கருணாதிலக மற்றும் K. லகிந்து அயேஷ் இந்துவர ஆகியோர் தங்கள் சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர். மனிதவளத் தலைவர் தனுஷ்க சமரசிங்க, தலைமை வணிக அதிகாரி நாமலி A. சில்வா, சந்தைப்படுத்தல் சேவைகள் - சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி உமேஷ் மதுஷாந்த் மற்றும் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் மூலோபாயம் மற்றும் திட்டமிடல் பிரிவின் தலைவர் ஜூட் சில்வா ஆகியோரால் விருதுகள் வழங்கப்பட்டன.
ஜனசக்தி லைஃப் பற்றி
1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.
