Header Logo

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸில் அடுத்த சர்ச்சை!

May 13, 2026 - 05:43 PM -

0

மும்பை இந்தியன்ஸில் அடுத்த சர்ச்சை!

ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து நடப்பு தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் இருந்து வருகிறது. அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. 

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தன, ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. வைத்தியக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று கூறினார். 

மேலும் கடந்த சில நாட்களாகவே அவரால் எவ்வித பயிற்சியிலும் ஈடுபட முடியவில்லை, காயம் காரணமாக களமிறங்கவில்லை என்று கூறியிருந்தார். 

ஆனால் இப்படி அவர் கூறிய சில மணி நேரங்களில், ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி செய்யும் இரு வீடியோகளை ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 

11 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் அடுத்த போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அனி வீரர்கள் அனைவரும் தரம்சாலாவிற்கு புறப்பட, ஹர்திக் பாண்டியா மட்டும் செல்லவில்லை. 

அவருக்கு பதில் இந்த போட்டியிலும் சூர்ய குமார் யாதவ் அணி தலைவராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. காயம் தான் காரணமா அல்லது நிர்வாகத்துடன் ஏதேனும் பிரச்சனையால் விலகி இருக்கிறாரா? ஹர்திக் என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title