May 14, 2026 - 10:42 AM -
0
மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு எண்ணப்பாடும் அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்திற்கு நேற்று (13) மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அழிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னைய காலத்தில் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்காக எல்லை நிர்ணயத்தை கொண்டு வந்தவர்களே, இன்று ஒன்று கூடி தேர்தலை பற்றி பேசுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
